ஞாயிறு, ஜனவரி 01, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2011-அதிக வாசகர்கள் படித்த எனது பத்து பதிவுகள்


வலைப்பதிவுகளில் விதம்விதமாக எழுதிக் குவிக்கிறோம்.எம்மாதிரியான பதிவுகள் அதிக வாசகர்களை ஈர்த்தன என்பது நமக்கு உதவும்.இவை வாசகர்களின் மனப்போக்கை நமக்கு அறிவிக்கின்றன.அதிகம் படிக்கப் படும் பரபரப்பான அரசியல் பதிவுகளை நான் எழுதியதில்லை.சினிமா குறித்த இடுகைகளும் மிக குறைவு.தனி மனிதனுக்கு பயன் தரும் விஷயங்கள் முதன்மை பெற்றதை உணர முடிகிறது.தலைப்புக்கு அடுத்துள்ள எண்ணிக்கை எத்தனை பேர் படித்தார்கள் என்பதைக் குறிக்கிறது.
                                 பலருக்கு தொப்பை ஒரு பிரச்சினை.அதிக வாசகர்களை கவர்ந்த்தில் ஆச்சர்யம் இல்லை.பல ஆலோசனைகள் இருக்கின்றன.இப்பதிவும் தகவல்களை கூறியது.
                                    உண்மையாக நடந்த விஷயம்.சில நிகழ்வுகளில் நிஜமான காரணம் வெளியே வருவதில்லை.இறுதிவரை தெரியாமலேயே போய்விடுவதும் உண்டு.
                                    இதுவும் உண்மைசம்பவம்தான்.எதிர்பாராமல் நான் நேரில் சந்தித்த ஒரு நிகழ்வு.இதே போன்ற வேறொரு இளைஞர் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தார்.
                                   நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டு ஒரு அலசல்.பெண்களின் சமூக நிலையை இது போன்ற செய்திகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.வறுமை,வரதட்சணை போன்றவை ஏற்படுத்தும் விளைவுகள்.
                                 நம்மில் பலருக்கு இதில் ஆர்வம் உண்டு.அந்த ஆர்வம் அதிகமானவர்களை படிக்கத் தூண்டியிருக்கிறது.இரண்டாம் பகுதியும் ஒரு பதிவாக தந்தேன்.
                                   அரசியல் பதிவுகளில் ஆர்வம் இல்லாவிட்டாலும் தேர்தல் நேரத்தில் ஓரிரு பதிவுகளை தந்தேன்.என்னுடைய நேரடி கள  அனுபவமும்,தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் நிகழ்வும் அடங்கியிருக்கிறது.
                                    கள்ளக்காதல் எப்போதும் என் கவனத்தைக் கவர்ந்து வந்திருக்கிறது.இப்பிரச்சினை குறித்து வேறு சில இடுகைகள் தந்திருந்தாலும் அதிகம் படிக்கப்பட்ட பதிவு இது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தந்திரமாக தங்களது தவறுகளை மறைக்க முயல்வதை சொல்கிறது.
                                     தமிழ் நாட்டில் சாப்பிடாதவர்கள் இருப்பார்களா என்ன? நீர் வழி பரவும் நோயைத்தடுக்க கொதிக்கவைத்த நீர் பருகுவோர் கோட்டை விடும் இட்த்தை சுட்டிக்காட்டிய பதிவு.நிஜமாக நடந்த சம்பவம்.
                                     பரவலாக நம்மிடம் இருக்கும் நம்பிக்கையை உளவியல் ரீதியாக அலசப்பட்ட ஒரு பதிவு.கன்னத்தில் மை வைப்பது முதல் திருஷ்டி பூசணிக்காய் வரை சொல்லப்பட்டிருந்த்து.
                                     அனைவரும் அறிந்திருக்கவேண்டிய முக்கியமான பதிவு.இன்றைய பெரும் பிரச்சினை மனநலம்.நமது மனநலனை அறிந்து கொள்ள இப்பதிவு உதவும்.
-

கருத்துகள் இல்லை: