திங்கள், மார்ச் 19, 2012

வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள்.

சிலருக்கு கணக்கு என்றாலே வேப்பங்காயக கசக்கும். கணக்குக்கு பயந்துகொண்டே பெரிய வகுப்புகளில் போகும் சமயம் கணக்குவராத படிப்பாக தேர்ந்தேடுத்து படிப்பார்கள்.சற்று சிரமமாக இருந்தாலும் புரிந்துகொண்டால் இமயமலையும் நமக்கு பரங்கிமலைதான். இன்றைய பதிவில் மாணவர்களுக்கு பயன்படும் அல்ஜீப்ரா ப்ராபளம்களின் பிடிஎப் தொகுப்பினை இணைத்துள்ளென். பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல இது 1000 கணக்குகள் அடங்கிய அல்ஜீப்ரா ப்ராபளம் உள்ளது. தேர்வுநேரம் ஆகையால் இந்த பதிவு.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
.
THANKS:
வாழ்க வளமுடன்
வேலன்.

ஞாயிறு, மார்ச் 18, 2012





கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை : நவின்.

எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.

இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன்.
Image
அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்!

எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக்.
Image
கருவில் இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட எனது பெற்றோர் தங்கள் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அனைவருடைய கேள்வியும், "கடவுள் என்பவர் கருணையுள்ளவராக இருந்திருந்தால் கை, கால்கள் இல்லா ஒரு ஜீவராசியைப் படைத்து, இந்தப் பூவுலகில் பரிதவிக்கவிட வேண்டிய அவசியம்தான் என்ன? அதுவும் ஒரு உண்மையான கிறிஸ்தவப் பாதிரியாருக்கு இப்படியொரு தண்டனையா?" என்பதுதான். என்னை மட்டும் இப்படிப் படைத்த அந்த இறைவன் எனக்குப் பிறகு என் பெற்றோருக்குப் பிறந்த தம்பி தங்கையரை அப்படிப் படைக்கவில்லை. இந்த நிமிடத்தில் என் கண்களில் கண்ணீரோடு நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கையும், காலும் ஏன் விரல்கள்கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தெடுக்கப் பட்ட வேதனைகள்தான் எத்தனை? அவமானங்கள்தான் எத்தனை? சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் நெடுநாள் பிழைக்க மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கை எனது பெற்றோர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! நியாயம்தானே! பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது "அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்.

குறைபாடுள்ள குழந்தையைக் கொடுத்த கடவுள் கூடவே எனது பெற்றோருக்குத் தன்னம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் கொடுத்திருந்தார். நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருப்பதாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க என்னை அனுமதிக்கவில்லை. இப்போது என் அம்மா அதனை எதிர்த்துப் போராடினார். தன் மகன் படும் வேதனைகளைவிட, ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அனுபவித்தவராயிற்றே! அரசுடன் யுத்தமொன்றையே நடத்தினார். ஒரு வழியாக வெற்றியையும் பெற்று, இதோ நான் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன, சமுதாயம் என்றால் என்ன, அதற்குள் எத்தனை போலித்தனம், எது எதார்த்தம், எது உண்மை என்பதையெல்லாம் வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் பூக்கள் நிறைந்த பல்லக்கில் பயணிக்கவில்லை. நான் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். கேலி பேசப்பட்டேன். சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டேன். ஒவ்வொருவரும் என்னை முகச்சுழிப்போடு பார்க்கும்போது உயிரோடு என்னைத் தோலுரித்த வேதனையை அனுபவித்தேன். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்த துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன். துடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட மட்டுமே முடிந்த என் அன்னையால் எந்த ஆறுதலும் கூறமுடியவில்லை. ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது.
Image

ஆனால் இதுபோன்ற மனவேதனையை அனுபவிக்கும்போதுதான் அதன் வீச்சு என்ன என்பது புலப்படும். காரணம் என்னை அனைவருமே கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். என் பக்கத்தில் வருவதைக்கூட அவமானமாக நினைப்பார்கள். அருவருத்து ஒதுக்குவதைப் பார்க்கும்போது நான் அப்படியே அணு அணுவாகச் செத்துப் பிழைத்திருக்கிறேன். இவற்றையெல்லாம் என் பெற்றோரிடம் வந்து சொல்லி அவமானத்தால் எத்தனையோ முறை நான் பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கிறேன். இதற்காகவே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சென்றிருக்கிறேன். பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னை உட்கார வைத்து, பக்குவப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நான் அழுதால் அழுது, அரவணைத்து, சிரிக்கவைத்து, சிந்திக்கச் செய்து, ஊக்கமூட்டி என்னை, என் வயதுக்காரர்களிடம் பழகவேண்டாம், அப்படிப் பழகினால் மன அழுத்தம்தான் அதிகமாகுமென்று, என்னைவிட வயது குறைந்த குழந்தைகளோடு பழக வைத்து, பேச வைத்துப் பல நண்பர்களை எனக்கு உருவாக்கித் தந்து, என்னை இதோ உங்கள் முன் ஒரு உன்னத மனிதனாக நிற்க வைத்து, நான் பேசும் பேச்சை, தன்னம்பிக்கைச் சொற்பொழிவை ஆயிரமாயிரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கேட்டுப் பிரமிக்கச் செய்த அந்த உள்ளங்கள், மனிதப்பிறவிகள் இல்லை, அவர்கள் என் தெய்வங்கள். என் பெற்றோர்கள் என்பதையும் விட எனது கண்களாய், கைகளாய், கால்களாய் எனக்கு எது வேண்டுமோ அதுவாகவோ ஆகி என்னை உங்கள் முன் நிற்கச் செய்திருக்கிறார்கள். நான் பாக்கியசாலி அல்லவா?

Image
ஆம்! நான் உடலளவில் மட்டுமே உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். எனக்குக் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை? உள்ளத்தளவில் உங்களைப்போன்ற அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன்தான் இந்த நிக்.

எனக்குள்ளும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை இதோ! என் இருபத்தைந்து வயதிற்குள் எட்டிப் பிடித்துவிடுவேன். இது சத்தியம்! எனக்கு இப்போது வயது 21. எனது 15 ஆவது வயதில் பைபிளில் ஒரு வசனத்ததைப் படித்தேன். அதிலிருந்து கடவுள், தான் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ, அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோதான் செவ்வனே செய்து முடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் அந்தப் பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையையே நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்
Image
நான் இப்படியொரு ஊனமாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் எனது வாழ்க்கையை இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் எத்தனையோ சகோதர சகோதரிகளை மனதளவில் நல்வழிப்படுத்தியிருக்கிறேன். என் உருவத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் இந்த உலகத்தில் மனதளவில் ஊனப்பட்ட எத்தனையோ பரிதாபத்திற்குரிய என் தோழமைக்குரியவர்களை மாற்றியிருக்கிறேன். மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். சிலவற்றை மாற்றமுடியாது. அதனால் சிலரையாவது மாற்ற முயல்கிறேன். உதாரணம் என் உருவம். அதை நான் மாற்றமுடியுமா? முடியாது. ஆனால் உங்களை என்னால் மாற்ற முடியும். இதோ! பார்த்தீர்களா? நீங்கள் மாறிவிட்டீர்கள். “கெட்ட நேரமென்ற ஒன்று என்றுமில்லை, நல்லவைகளைத் தொடங்க எல்லாமே நல்லநேரம்தான். இன்றே தொடங்குங்கள்!” உங்களை மறுபடியும் ஒரு மகத்தான பொழுதுகளில் சந்திப்பேன். நன்றி! வாழ்த்துக்கள்!! வணக்கம்!!கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம். நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரச் செருப்புக்கள். அவற்றை பயனுள்ளதாக வாழ்ந்து விடுவோமே! அவமானங்களை, வேதனைகளைத் தூக்கியெறியுங்கள்! நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை, அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தைத் தொடருங்கள்!சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்.

Image
முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்யத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும்படியும் அமைத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்புப் பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்பொழுது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வுமனப்பான்மைகள் தரை மட்டமாவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பிரமித்துப் போயிருக்கிறேன். என் சொற்பொழிவு இந்த உலகம் முழுதும் ஒலிக்கப்பட வேண்டும். எனது வாழ்க்கை முழுதும் ஏழை, எளிய மக்களுக்கும் மனத்தால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவைதான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே! நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் எழுதிக்கொண்டிருக்கும் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை என்ற நூலை வெற்றிகரமாக இந்த ஆண்டிற்குள் முடித்தும் விடுவேன்.

Image
உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள்! அதில் கவனம் செலுத்துங்கள்! வெற்றியடைவீர்கள்! என்ன திறமை இருக்கிறதெனத் தேடிப் பார்க்காதீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதைவிடத் தேவையில் நம்பிக்கை வையுங்கள்! அதை எளிதில் அடைவீர்கள்! விரைவில் பெறுவீர்கள்! பிறகு அதுவே திறமையாகவும் மாறிவிடும். நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால், அதற்காகத்தான் உங்களைக் கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்ற நம்புங்கள். அந்த எண்ணம் உங்களுக்குத் தானாக வரவில்லை. அது அவன் ஏற்கனவே எழுதியதுதான். அதனை இன்றே காலம் தாழ்த்தாது செய்துவிடுங்கள்! நாம், காரணமில்லாமல் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறோம். அந்தக் கட்டுப்பாடுகள் உங்களின் வேகத்தைக் குறைக்குமே ஒழிய விவேகத்தை ஏற்படுத்தாது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் சாதிக்கப் பிறந்தவைதான். நானே சாதிக்கத் துணிந்துவிட்ட பின் நீங்கள் மட்டும் ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள்! உங்களால் முடியும்! நாம் சாதிப்பதற்கு எல்லை என்பது ஒன்றும் இல்லை. அவை நாம் போட்டுக் கொண்டவை. அவற்றைத் தகர்த்தெறியுங்கள்! இதோ ஒரு ஒளிமயமான பாதை உங்கள் கண்முன் தெரிகிறது. இன்றே! இப்பொழுதே புறப்படுங்கள்!! சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். தொடங்கும்பொழுது எவரும் சாதனையாளனாகத் தொடங்குவதில்லை, தொடங்கியபின் எவரும் சாதனை படைக்கத் தவறியதுமில்லை! பிறகென்ன தாமதம்? தொடங்குங்கள்!! இதோ களம் காத்திருக்கிறது!

- நவின்

நன்றி
- நவின்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14970&Itemid=185 

வெள்ளி, மார்ச் 09, 2012

பாமரனும் புரிந்து கொள்ள உணவுப்பாதுகாப்பு சட்ட தமிழாக்கம்.

                       கரூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணிபுரிந்து வரும் என் நண்பர் திரு.கொண்டல்ராஜ், புதிய உணவுப்பாதுகாப்பு சட்டம் மற்றும் அதைச்சார்ந்த விதிகள்,ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். அதனை, அவர் அனுமதியோடு, என் தளத்தில் பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

                                                                   பகுதி-1
பதிவுச் சான்றிதழ் பெறும் சிறு உணவு வணிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான தூய்மை மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள்
                                               ஒழுங்குமுறை 2.1.1(2)
உணவு தயாரிப்பாளர்கள்/பதப்படுத்துபவர்/கையாள்வோர் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் தூய்மைத்தேவைகள் உணவு தயாரிக்கும், கையாளும், பதப்படுத்துமிடங்களில், கீழ்க்கண்ட தேவைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.
1. வளாகம் அசுத்தமற்ற சுற்றுப்புறம் கொண்ட சுகாதாரமான இடத்தில் அமையப் பெறுவதுடன், எல்லாவகையிலும் தூய்மையான சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும். அனைத்து புதிய உணவு வர்த்தகக் கடைகளும் மாசுபடும் சுற்றுச்சூழல் கொண்ட பகுதிகளைவிட்டு விலகியிருக்குமாறு அமைய வேண்டும்.
2. உணவு தயாரிப்புவளாகம், பராமரிப்பதற்கு, உணவு தயாரிப்பிற்கு 
மற்றும் உணவை சேமிப்பதற்குத் தேவையான போதுமானஅளவு 
எல்லாவகையிலும் தூய்மையான சுற்றுப்புறம் கொண்ட இடத்தைக் 
கொண்டிருக்க வேண்டும்.
3. மேறப்டி இடம் சுத்தமாகவும், போதுமான வெளிச்சம் மற்றும் 
காற்றோட்டத்துடன் இருப்பதுடன், நடமாட்டத்திற்குப் போதுமான 
இடவசதியையும் கொண்டிருக்க வேண்டும்.
4. மேற்படி இடத்தின் தரைப்பகுதி, மற்றும் மேற்கூரை ஆகியவற்றை  
கீரல், விரிசல் ஏதுமின்றி நல்லநிலையில், சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
5.பூச்சிகள் தயாரிப்புக் கூடத்திற்குள் இல்லாதவாறு, தரை, சுவர் இடுக்குப் பகுதிகளை தேவைக்கேற்ற சிறந்த கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். உணவு தயாரிப்பின்போது பூச்சிமருந்து தெளிக்கக்கூடாது. ஆனால் வளாகத்தின் உள்ளே நுழையும் பூச்சிகளுக்கு, அவற்றை கவர்ந்து கொல்லும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். சன்னல்கள், கதவுகள் மற்றும் பிற திறவைகளை வலை அல்லது திரையமைத்து, பூச்சிகளில்லா இடமாகப் பராமரிக்க வேண்டும். உணவு 
தயாரிப்புக்குப்பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருப்பதோடு, 
தேவைப்பட்டால்அங்கீகரிக்கப்பட்டபரிசோதனைக்கூடங்களில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரசாயன மற்றும் நுண்ணுயிரியல் பரிசோதனை செய்ய வேண்டும்.
6. தூய்மையான தணண்ர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய  
வேண்டும், விட்டு, விட்டு தண்ணீர் விநியோகம் இருக்கும் பட்சத்தில், 
உணவில் பயன்படுத்த அல்லது சுத்தம் செய்ய, தண்ணீரைப் பாதுகாப்பாக சேமிக்க, போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
7. இயந்திரங்கள், மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டின்போது சுத்தம் 
    செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  
    கொள்கலன்கள், மேசைகள் மற்றும் இயந்திரங்களின் செயற்பகுதிகள் 
    போன்றவற்றை சுத்தம் செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க   
    வேண்டும்.
8. உடல்நலக்கேட்டை ஏற்படுத்தக்கூடிய உலோக நச்சுத்தன்மையை 
   ஏற்படுத்தக்கூடிய சாதனங்கள் அல்லது கொள்கலன்களை, உணவு 
   தயாரிக்கவோ, பேக்கிங் செய்யவோ அல்லது சேகரிக்கவோ 
  பயன்படுத்தக் கூடாது. (செமபு,அல்லது பித்தளைப் பாத்திரங்கள் 
 முறையான முலாம் பூச்சை கொண்டிருக்க வேண்டும்).
9. உணவு தயாரிப்புப் பணி முடிந்தவுடன், பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை சுத்தமாகக் கழுவி, பூஞ்சைத்தொற்று ஏற்படாதவாறு உலர்த்தி அடுக்கி வைக்கப்பட வேண்டும்.

10.ஆய்வு செய்ய ஏதுவாக அனைத்து உபகரணங்களும்  சுவர்ப்பகுதியிலிருந்து போதுமான இடைவெளியுடன் அமைக்கப்பட வேணடும்.
11.சேகரமாகும் கழிவுகளையும் கழிவுநீரையும் முறைப்படி அப்புறப்படுத்த போதுமான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். 
12. தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் பணிக்கான பணியாளர்கள், தொப்பி, கையுறை(GLOVES), மேலங்கிகள்(APRON) ஆகியவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
13. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.காயம், புண்களுக்கு உரிய கட்டுப்போடப்பட்டு, அப்பணியாளர்களை உணவுடன் நேரடித்தொடர்பு கொள்ள அனுமதிக்கக் கூடாது.

14. பணியாளர்கள் நகங்களை வெட்டி சுத்தமாக பராமரிப்பதுடன், பணியை தொடருமுன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் சோப்பு அல்லது தொறறு நீக்கியால் கைகளைக் கழுவவேண்டும். உணவைக் கையாளும்போது தலை மற்றும் உடற்பகுதிகளைச் சொறிவதை தவிர்க்க வேண்டும்.
15. உணவைக் கையாள்வோர், உணவில் விழக்கூடிய போலிநகங்கள் அல்லது பிற ஆபரணங்கள் போன்றவற்றை அணிவதைத் தவிர்ப்பதோடு, பணிநேரங்களில், அவர்கள் தங்களின் முகம் மற்றும் முடியைத் தொடுவதையும தவிர்க்க வேண்டும்.
16. வளாகத்தினுள் குறிப்பாக உணவைக் கையாளும்போது, உணவு உட்கொள்ளுதல், வாயை மெல்லுதல், புகைபிடித்தல, துப்புதல், மூக்கை சீந்துதல் ஆகியவை தடை செய்யப்பட வேண்டும்.
17. அசுத்தமாவதைத் தவிர்க்க, சேமித்த அல்லது விற்பனைக்கு  வைக்கப்பட்டிருக்கும் பொருட்களனைத்தும், முறையான மூடியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
18. உணவை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் வண்டிகள், சுத்தமாவும்,சுகாதாரமாகவும், நன்கு பழுதுநீக்கம் செய்யப்பட்டும் பராமரிக்கப்பட வேண்டும்.
19.பொட்டலமிடப்பட்ட (பேக்கட்டுகளில்) அல்லது கொள்கலன்களில்  உணவை எடுத்துச்செல்லும்போது, அதற்கான வெப்பநிலையை  பராமரிக்க வேண்டும்.
20.பூச்சிக்கொல்லிகள் ,கிருமிநாசினிகள் மற்றும் சோப்பு போன்ற சுத்தம் செய்யும் பொருட்களை உணவு தயாரிக்குமிடம், உணவு இருப்பு வைக்குமிடம் மற்றும் உணவைக் கையாளுமிடம் ஆகிய இடங்களுக்குத் தொடர்பின்றி, தனியிடத்தில் வைக்க வேண்டும்.
                                                                             
                                                                              உணவு தயாராகி இன்னும் வரும் . . . 
THANKS:

தேசிய விருதுகள்: வாகை சூடிய தமிழ்த்திரை

மெகா பட்ஜெட் ஆடம்பர செலவுகள் இல்லை. படத்தின் அரை வாசி செலவை சம்பளமாக கேட்கும் நட்சத்திர நாயகர்கள் இல்லை. பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. கவர்ச்சியான கதாநாயகி இல்லை. முக்கியமாக ,சேட்டிலைட் டிவிகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் விளம்பரம் இல்லை. 

இப்படி எதுவுமே இல்லாமல்  ஐந்து தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் திரையுலகம்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : அழகர்சாமியின் குதிரை
சிறந்த தமிழ் திரைப்படம்                         : வாகை சூட வா
சிறந்த துணை நடிகர்                                 : அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை )
சிறந்த புதுமுக இயக்குனர்                     : தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம் )
சிறந்த படத்தொகுப்பாளர்                         : பிரவீன் கே .எல் (ஆரண்ய காண்டம் )

சாதிக்க திறமை மட்டுமே போதும் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மேற்கூறிய எல்லா படங்களுமே   வசூலில் அடி வாங்கிய படங்களே.
திரையிட சரியான அரங்குகளும் நாட்களும் கிடைக்காமல்  , கமர்சியல் படங்களின் வரவுகளுக்கு இடையே இருந்த மிக குறுகிய காலகட்டத்தில் திரையரங்குகளை சந்தித்தவை.ஆனால் அரங்குகளை நிரப்பவில்லை.  காரணம் - படிக்க பதிவின் முதல் பத்தி.

இப்போதைய காலகட்டத்தில் பலகாரம் சுவையாய் தரமாய் இருப்பதை விட அதை  பார்ப்பதற்கு அழகாக wrap செய்து  மக்களை வாங்க வைக்கும் உத்தியே வெற்றி பெறுகிறது.ஆனால் வெற்றி என்பது வேறு. அங்கிகாரம் என்பது வேறு. இரண்டாவதற்கு , கடின உழைப்பையும்,திறமையையும் தவிர எந்த மேற்பூச்சு வேலையும் தேவை இல்லை. ஆதாரம் -  இந்த ஐந்து விருதுகள்.
திரையுலகின் பல விதிகளை உடைத்திருக்கின்றன மேற்கூறிய படங்கள்.

ஆரண்ய காண்டம் :

கதையும் அதன் களமும் முடிவான உடனே , தயாரிப்பாளருக்கு புரிந்திருக்கும் - கல்லாவை நிரப்ப தேவைப்படும் தாய்க்குலங்கள் ஆதரவு இந்த படத்திற்கு சைபர் என்று. உபயம் - படத்தில் தவிர்க்க முடியாத வசனங்கள்.ஆனாலும் முட்டி மோதி படத்தை வெளியிட்ட சரணுக்கு வாழ்த்துக்கள்.

மீதி வர வேண்டிய சொற்ப  கூட்டத்தையும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு புரியாத தரமான போஸ்டரின் ஆங்கில தாக்கத்தால் இழந்தது இந்த படம்.


படம் வெளிவந்து ஓடி முடித்த நான்கைந்து நாட்கள் தாண்டியே இது ஒரு தமிழ் படம் என்று பெரும்பானவர்களுக்கு  புரிந்தது.
  ஆனாலும் இயக்குனரும் , தொகுப்பாளரும் படத்தின் நாயகர்களாய் மிளிர்ந்தது சத்தியம்.
படத்தின் வேகத்தில் பிரவீனின் உழைப்பு நன்றாக தெரிந்தது. 
ஆரண்ய காண்டம் , கேங்ஸ்டர் படங்களின்  புது கோணத்தை , வேறு பாணியில் சொல்லும் விதத்தை அறிமுகப்படுத்தியது.

வசனங்களின் கூர்மையையும் , திருப்பங்களையும் நம்பிய இந்த படம்  தமிழ் திரை சரித்திரத்தில் ஒரு மைல்கல்.

அழகர்சாமியின் குதிரை:

வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரனின் இன்னொரு காவியம். ஒரு கதையை திரைப்படம் ஆக்கும்போது அந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் படத்தில் உபயோகித்த விதத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
அப்புக்குட்டி , அழகர்சாமி பாத்திரத்தின் கனகச்சிதமான நல்ல தேர்வு. இளையராஜா இசை , காட்சிகளில் தெறித்த  உணர்வுகளுக்கு  மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.


பொழுதுபோக்குக்கு தேவையான அனைத்து நல்ல அம்சமும் படத்தில் உண்டு.ஆனால் அவை யாவும் யதார்த்த   கோட்டுக்குள் மட்டுமே நின்று சாதித்திருக்கிறதே தவிர , காதை அடைக்கும்  குத்து பாட்டும் , கண்ணை உறுத்தும் சண்டை காட்சிகளும் அல்ல. கதை ,குதிரையை சுற்றிய நூலை நழுவவிடாமல் மற்ற துணை கதைகளை இணைத்து சென்ற விதம் அருமை.


ஒரு நடிகனுக்கு , நாயகனுக்கு தேவையான எந்த அடையாளமும் அப்புகுட்டிக்கு இல்லை. அதுவே இந்த வெற்றிக்கும் காரணம். அப்புகுட்டியின் இந்த வளர்ச்சி  கண்டிப்பாக திரையுலகில் நுழைய நினைக்கும் எந்த சாமானியனுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

சுசீந்திரன் ,தமிழுக்கு இன்னொரு பாரதிராஜாவாக வர தகுதியான இயக்குனர். அவசரப்பட்டு 'ராஜபாட்டையில்' பயணிக்காமல் நிதானமாய் சென்றால் வளர்ச்சி தொடரும்.

வாகை சூட வா:

வசூலில் கடும் இழப்பு , நாயகன் விமல்  , வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வைத்தது. நல்ல படங்களுக்கு மட்டுமே உண்டான சாப நிலை இது.

பீரியட் படங்கள் வரிசையில் நல்ல கருத்தையும் முன்வைத்து வெளியான படம். வெயில் தகிக்கும்  சூழலில் , கலகலப்பான கிராமிய பின்னணியுடன்  அழகான காதலையும் சேர்த்து கொடுத்த படம். கிப்ரானின் இசை புது மாதிரியாய் கிறங்கடிக்க வைத்தது.


விமலின் அப்பாவித்தனமான நடிப்பும் , ஓவியாவின்  வாயாடித்தனம் கலந்த துடிப்பும் , ஏனைய நடிகர்களின் ஆரவாரமில்லாத பங்களிப்பும் , படத்தின்  தரத்தை உயர்த்தியது.   சிறந்த படங்களில் இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.வெகு பொருத்தமான தேர்வு.

-------------------------------------

இந்த படங்கள்  வெளியாகி , மக்களின் மவுத்டாக் மூலம் ' நல்ல படம் , பார்க்கலாம்' என்று கூட்டம் தயாரவதற்குள், திரையரங்குகளில் இருந்து காணாமல் போக நேர்ந்தது.  இது போன்ற நல்ல முயற்சிகளை 'ஆவண படம்' அல்லது  'அவார்டுக்கு மட்டும் தகுந்த படம் ' என்று ஒதுக்குகிற  விபத்தும் எப்போதும் நேர்கிறது.

ஆனால் இந்த மூன்று படங்களும் , ஆவணப்படம் போல  வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல் அதை சுவாரஸ்யமாகவும் . நகைச்சுவையுடனும்  சொல்லி பார்ப்பவரை சிரிக்க வைத்திருந்தாலும் ,தயாரிப்பாளர்களை அழ வைத்தவை என்பது உண்மை.

ஒரு பெரிய நடிகனின் பட பட்ஜெட்டில் ,இது போன்ற பத்து படங்கள் செய்து விடலாம் என்பது நிதர்சனம்.

ஒரு பக்கம்  , நல்ல படங்களை  கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்படி மிக கடினப்பட்டு அவர்கள் கொடுக்கும் படத்தை வரவேற்று  அதை காப்பாற்றும் ரசிகர்கள் இருக்க வேண்டும்.  இரண்டும் இல்லை என்றால் நல்ல கதை சொல்லி இயக்குனர்கள் காணாமல் போய் , ஹீரோயிசத்தில் கதையை பலி கொடுக்கும் இயக்குனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

தொடரட்டும் இந்த அங்கீகாரங்கள்.
 
THANKS:
 

ஞாயிறு, மார்ச் 04, 2012

விவாகரத்து பிரச்னையா?வியாபாரத்தில் நஷ்டமா?ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?


பொது ஜனங்களே, மகா ஜனங்களே, உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்னைகளா? கவலைப்படாதீர்கள்!
கஷ்டப்பட்டு சம்பாதிக்காதீர்கள்; முயற்சி செய்து முன்னேற நினைக்காதீர்கள்.
திட்டங்கள் தீட்டி தீர்வு காண முயற்சிக்காதீர்கள்.;
பெரிய செலவு இல்லை - மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.
இதோ ஒரு சுருக்கு வழி- கு(கி)றுக்கு வழி.
சொத்து வழக்கா? குடும்பத்தில் பாகப்பிரச்னையா? தம்பதிகளுக்குள் விவாக ரத்து பிரச்னையா?
இவற்றிலிருந்து விடுபட ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடையுங்கள்.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்யும் வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்புக் கிடைத்த பின் வடை மாலை சாத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் நஷ்டமா?
கவலைப்படாதீர்கள். லட்சுமி குபேரருக்கு நவ நிதிகளை வாரி வழங்கியவர் சிவ பெருமான். அவருக் குரிய பிரதோஷ நாளில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்தால் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.
---------- தினமலர் ஆன்மீக மலர்
பரதநாட்டியம் கற்கவேண்டுமா?
பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டுமா? இசைக் கருவிகளை மீட்டிட ஆசையா? கல்விக் கடாட்சம் கிட்ட வேண்டுமா?
இதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? இதோ ஓர் எளிய வழி இருக்கவே இருக் கிறது. நாம் ஏதாவது மந்திர உபதேசமோ, குரு உபதேசமோ பெறுவதென்றால் அதை மாசி மகத்தன்று வைத்துக் கொள்ள வேண்டும். மந்திரம் பளிச்சென்று சித்தியாகும். நல்ல பலனைக் கொடுக்கும்.
அதே போல புதிதாக பரதநாட்டியம், இசைக்கருவிகள், வாய்ப்பாட்டு, கணினி போன்ற கலை கல்விப் பிரிவுகளை மாசி மக நாளன்று தொடங்குவது மிகவும் விசேஷமாம். ஏனெனில் சிவபெருமானுக்கே முருகப் பெரு மான் பிரணவ உபதேசம் செய்த நன்னாள் இது.
-------------- தினகரன் ஜோதிட சிறப்பு மலர்
ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?
உங்களுக்கு சொர்க்கமும், ரொக்கமும் கிடைக்க வேண்டுமா? இதற்காக சிரமப்பட வேண்டாம்.
ஏகாதசியன்று சொர்க்க வாசலில் நுழைந்து வாருங்கள்.
- தினத்தந்தி ஜோதிடம்
கையில காசு வாயில தோசை
இவ்வளவு கு(கி)றுக்கு வழிகள், சுருக்கு வழிகள் இருக்கும் பொழுது அரசாங்கம் எதற்காக? சட்டங்கள் எதற்காக? திட்டங்கள்தான் எதற்காக?
குறிப்பு: இப்படி வெளியிடுகிற இதழ்களின் முதலாளிகளோ, கூலி எழுத்தாளர்களோ இவற்றை மட்டுமே நம்பி வேறு எதையும் செய்யாமல் பூஜிக்கிறார்களா? புத்தியைப் பயன் படுத்திப் பார்க்கவும்.
-------------- கருஞ்சட்டை 3-3-2012 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

THANKS:

தேடுதல் பொறியில் தேடுதல் தந்திரங்கள்



கணினியின் அடிப்படை செயல்பாடுகள் அனைத்தும் இணையத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலம், இணையம் இருந்தால் உலகத்தை ஓரடியில் அளந்து விடலாம் என்பது சாத்தியப்பட்டிருக்கிறது. அண்டவெளியை ஆராயும் அறிவியல் தொடங்கி அடுப்படியில் செய்யும் ஆகாரம் வரை அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள இணையம் துணை புரிகிறதென்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட இந்த தகவல் கிடங்கில் எங்களின் தேடல் பயணத்தின் கைகாட்டி மரங்களாக இருப்பவை தேடற் பொறிகள் (Search engines).
இந்த சேவையை முண்டியடித்து கொண்டு எத்தனை நிறுவனங்கள் வழங்கினாலும், சாதாரணமாக ஆரம்பித்து இன்று இணையத்தையே ஆறு எழுத்துக்களால் ஆட்சி செய்வதென்னமோ கூகிள் (Google) தேடு பொறிதான். பொதுவாகவே எந்தவொரு பொறியிலிருந்தும் விளைதிறனை சிறப்பாக பெறுவதற்கென்றே சில நுட்பங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கூகிளையும் ஒரு பொறி என்று சொல்வதால் அதனை இயக்கவும் சில நுட்பங்கள் அதாவது தேடுதல் தந்திரங்கள் இருக்கின்றன. இவற்றை அறியாமலே இன்று பல நண்பர்கள் தாங்கள் தேடுகின்ற விஷயங்களை கூகிள் காட்சிப்படுத்துவதில்லை, என்று குறைபட்டுக் கொள்கிறனர். நாங்கள் எதிர்பார்க்கின்ற தேடல் முடிவுகள் கிடைக்க சில நுட்பங்களை தொகுத்து தருகிறேன்.


* நீங்கள் தேடல் பொறிகளில் தேடுகின்ற போது ஆங்கில பெரிய எழுத்துக்களிலோ (Upper case) அல்லது சிறிய எழுத்துக்களிலோ (Lower case) தேடலாம். ஆனால் தேடல் பொறிகள் சிறிய எழுத்துக்களில் (Lower case)
 உள்ள சொற்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எப்போதும் தேடுவதற்க்கு சிறிய எழுத்துக்களினையே (Lower case) பயன்படுத்துங்கள்.

* சிலவேளைகளில் ஒரு சொற்தொடரை கொடு்த்து தேட வேண்டிய நிலை இருக்கும். அவ்வாறான வேளைகளில் சொற்களின் இடையே + குறியை சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக "ஐரோப்பாவின் உதைப்பந்தாட்ட விளையாட்டின் வரலாறு" என்பதை தேட விரும்பினால் பின்வருமாறு தட்டச்சு செய்து தேடுங்கள். history+Football+Europe

* அடுத்து, நீங்கள் தேடுகின்ற விஷயங்களுக்கான தேடல் முடிவுகள் நீங்கள் தேடிய தலைப்பிலேயே வரவேண்டும் என நினைக்கின்ற சந்தர்ப்பங்கள் வரலாம். அவ்வாறான வேளைகளில் நீங்கள் தேடுகி்ன்ற சொற்களை இரட்டை மேற்கோள் குறிக்குள் (Double quotation) கொடுத்து தேடுங்கள். உதாரணமாக உங்களுக்கு இந்தியாவின் வரைபடம் தேவைப்பட்டால் தேடல் பொறிகளில் சென்று "Map of India" என்று தேடினால் இதே சொல்லை ஒத்த முடிவுகளை பெறலாம்.

* இறுதியாக, எப்போதுமே தேடல் பொறிகளில் தேடுகின்ற போது "and", "or" ஆகிய வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களின் தேடல் முடிவுகளை இவை மாற்றி விடும்.

நான் மேலே சொன்ன இந்த விஷயங்களை இனி தேடல் பொறிகளில் தேடுகி்ன்ற போது கவனத்தில் கொள்ளுங்கள். வழமையாக ஆரம்பத்தில் எழுதுவதை ஒரு மாற்றத்திற்காக இறுதியில் எழுதுகின்றேன். மீண்டுமொரு முறை உங்களை எனது வலைப்பதிவின் ஊடாக சந்தித்ததில் மகிழ்ச்சி... மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.

2 கருத்துக்கள்:

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html
    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு நண்பரே!
    ReplyDelete
     
    THANKS:

சனி, மார்ச் 03, 2012

சூரிய குடும்பம் 3 (பூமி) : நட்சத்திரப் பயணங்கள் 9


நட்சத்திரப் பயணங்கள் என்ற எமது பிரபஞ்சம் பற்றிய அறிவியல் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். சென்ற தொடரில் எமது பூமியின் உபகோளான சந்திரன் பற்றி பார்த்தோம்.
இத்தொடரினைப் படித்து வாசகர் ஒருவர் பூமியின் சுழற்சியைக் கொண்டு எவ்வாறு நேரம் மற்றும் மாதங்கள் கணிக்கப் படுகின்றன எனும் வினாவினை எழுப்பியிருந்தார். இத் தொடரில் அதற்கான விடையையும் பூமி பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வோம்.



சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் 'புளூ பிளானெட்' என பூமி அழைக்கப் படுகின்றது. புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.



பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன. நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் -

1.பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் - 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்
3.சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
4.பூமியின் சராசரி ஆரை - 6371 Km
5..துருவ ஆரை - 6356.8 Km
6.சுற்றளவு (கிடை அச்சில்) - 40 075.02 Km
7.நீள் கோள மேற்பரப்பளவு - 510 072 000 Km2
8.கனவளவு - 1.0832073 * 10 இன் வலு 12 Km3
9.நிறை - 5.9736 * 10 இன் வலு 24 Kg
10.சராசரி அடர்த்தி - 5.5153 g/cm3
11.மையத்திலிருந்து ஈர்ப்பு விசை - 9.780327 m/s2 அல்லது 0.99732 g
12.தப்பு வேகம் - 11.186 Km/s
13.சாய் கோணம் - 23.439281 பாகை
14.எதிரொளி திறன் - 0.367
15.மேற்பரப்பு வெப்பம் - 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)
16.வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் - 101.3 Pa
17. துணைக் கோள் - 1 (சந்திரன்)

பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப் படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப் படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரி மாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம். பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப்பட்ட போதும் தற்போது அந் நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியாக சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றி வரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது.

பூமியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும். வட துருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக் கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர் காலமும் ஏற்படுகின்றது. இதே போன்றே தென் துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப் படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.



பூமியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியில் மிக உயர்ந்த இடமாக வட இந்தியாவின் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப்படுகின்றன. பூமியில் உள்ள நிலப் பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களில் அடங்கியுள்ள நீரில் 97.5% வீதம் உப்பு நீராகவும் 2.5% வீதம் தூய நீராகவும் தூய நீரில் 68.7% வீதம் பனிக்கடிகளாகவும் காணப்படுகின்றன.


பூமியின் வளி மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளி மண்டலத்தின் மேற்பகுதி ஓசோன் படலத்தால் சூழப் பட்டிருப்பதால் பிரபஞ்ச பின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் எனப் படும் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது. புவி மேற் பரப்பில் சராசரி வளி மண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூரிய ஒளி மூலம் நிகழும் பச்சை வீடு விளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப் பார்த்தால் அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச்சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.



இதுவரை பூமி பற்றிய பௌதிக மற்றும் விண்ணியல் தகவல்களைச் சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்த  தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கிரகமான புதனைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.
- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்
முன்னைய பகுதிகள்

கணித திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டும் பயனுள்ள தளம்

ஆங்கில திரைப்படங்களில்  கணிதத்தை மையமாக வைத்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஒரே இடத்தில் காட்ட நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
திரைப்படங்கள் பல வகையான பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு நமக்கு காட்ட பல இணையதளங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட துறை சார்ந்த திரைப்படங்களை தேடுவதென்பது இன்று வரை சிரமமாக உள்ளது என்று எண்ணும் அனைவருக்கும் கணிதத் திரைப்படங்களை வகைப்படுத்தி காட்ட ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.math.harvard.edu/~knill/mathmovies/index.html
இத்தளத்திற்கு சென்று கணிதத்தை முன்னிருத்தி வெளிவந்த பல வகையான ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்து குறிப்பிட்ட திரைப்படத்தில் கணிதத்தை சொல்லும் காட்சிகள் அனைத்தையும் ஒரே சொடுக்கில் எளிதாக தறவிரக்கி பார்க்கலாம். இரண்டு வகையான ஃபார்மெட்டில்[ SWF, M4V ] இருந்து நமக்கு எந்த வகையான ஃபார்மெட் வேண்டுமோ அதை சொடுக்கி தரவிரக்கலாம். உதாரணமாக கணித்தை பற்றிய ஆங்கிலப்படங்களில் அதுவும் குறிப்பாக கணிதத்தை பற்றிய காட்சிகளை மட்டும் தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்
ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.
மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்
மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .
THANKS:
http://winmani.wordpress.com/2012/02/20/maths-movies/ 

மின்சாரத்தை சேமித்திட சில கருவிகள்!

மின்சாரம் இருந்தாதானடா சேமிக்கிறது! என நீங்கள் புலம்புவது கேட்கிறது. இருந்தாலும் மின்சாரம் இருக்கும்போது வீணாய் போவதை எப்படி சேமிக்கலாம் என்பதே இந்த பதிவு. நாம் பயன்படுத்தும் தொலைகாட்சி மற்றும் எல்லா மின் பொருட்களுமே, நாம் அவைகளை பயன் படுத்தாமலிருக்கும்போதே அதாவது அவை Standby-ல் இருக்கும்போதே சுமார் 30% மின்சாரத்தை எடுத்துக்கொண்டே இருக்கும். இப்படி நாம் பயன்படுத்தாமலிருக்கும் போது அவைகளின் மின் இணைப்பை சில கருவிகள் துண்டித்து விடும். சில கருவிகள் அவை எப்போது எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறது என்றும், சில கருவிகள் நாம் பயன்படுத்தாத உபகரணங்கள் எவ்வளவு பணத்தை எடுக்கும் என்பதையும். சில கருவிகள் அவைகளின் தேவைக்குண்டான மின்சாரத்தை மட்டும் அனுமதிக்கும் என்பதையும் பற்றிய பதிவு இது. இன்றைய தொலைகாட்சிகள் presence sensor என்னும் தொழில் நுட்பத்தை கொண்டுள்ளன! அதாவது நாம் தொலைக்காட்சியின் முன்பிருந்து சென்று விட்டோம் என்றால் அது தானாகவே அணைந்துவிடும். மீண்டும் நாம் வந்த்ததும் செயல்பட தொடங்கும். இதன் மூலம் வீண் மின் விரயத்தை குறைக்கிறது. ஆனால் பழைய தொலைக்காட்சிகளில் இவை இல்லாததால் நாம்தான் மின் விரயத்தை கட்டுப்படுத்த வேண்டும். காரணம் தொலைக்காட்சிகள் standby-ல் இருக்கும் போதே சுமார் 3௦% முதல் 5௦%வரை மின்சாரத்தை எடுத்துக்கொண்டிருக்கும்(மாடலை பொறுத்து).கூடவே ஆயுளையும் குறைத்துவிடும்.
மேலே படத்தில் கொடுத்துள்ள மின் பிளக்கில் நாம் தொலைகாட்சி DVD பிளேயர் போன்றவற்றை பயன்படுத்தினால், நாம் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்தி அணைக்கும் போது, மொத்த மின் இணைப்பையும் துண்டித்து விடும். Standby-ல் இருக்காது. இது infra-red மூலம் செயல் படுகிறது.
இந்த மின் பிளக்கால் நாம் பயன் படுத்தும் ஒவ்வெரு கருவிகளின் மின் செலவை தெரிந்து கொள்ள முடியும்.
இது மிகவும் பயனுள்ள கருவி, இது இரண்டு கருவிகளாக வருகிறது. ஒன்றை நம் வீட்டின் மின்சார மீட்டரில் phase ஒயரில் பொருத்த வேண்டும். அடுத்தது டிஜிட்டல் கிளாக் போல உள்ளதை நம் கண்ணில் எப்போதும் படும்படியான இடத்தில் வைத்து விட்டால் போதும். இது நம் வீட்டில் மொத்தம் எவ்வளவு மின்சாரம் செலவு ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையும், மொத்தம் எவ்வளவு பணம் அதற்கு ஆகிறது என்பதையும் காண்பித்துக்கொண்டிருக்கும். இதை நான் படுக்கை அறையில் வைத்துள்ளேன். தூங்கும் போது இதை ஒரு முறை பார்ப்பது நல்லது. வீணாக ஏதாவது இயங்கிக்கொண்டிருந்தால் அனைத்து விடலாம்.
இது சுமார் 35% முதல் 4௦% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என நம்பப்படுகிறது. இதை நம் வீட்டின் மீட்டருக்கு மிக அருகில் உள்ள பிளக்கில் பொருத்த வேண்டும். இது வீட்டில் இயங்கும் எல்லா மின் பொருட்களையும் கண்காணித்து அவற்றிற்கு தேவையான அளவு மின்சாரத்தை மட்டுமே அனுமதிக்கும்.
இந்த பிளக் ரிமோட் கண்ட்ரோல்-ஆல் இயங்குவது. எழும்பி போய் அணைக்க சோம்பல் படுபவர்களுக்கு இது மிகவும் நல்லது. Standby-ல் மின்சாரம் வீணாவதை இதன் மூலம் தடுக்கலாம்.
மேலேயுள்ள இரண்டு பிளக்குகளும் infra-red மூலம் செயல்படுபவை. இவற்றில் பொருத்தியுள்ளவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அணைக்கும் போது, standby-ல் இருக்காமல் மொத்த மின் இணைப்பும் போய் விடும். இதில் சில வகைகளில் சில பிளக்குகள் எப்போதும் அணையா வண்ணமும் செயல்படும். நமக்கு நிரந்தரமாக மின்சாரம் தேவைப்படும் பொருட்களுக்காக. நான் இங்கு சொல்லியுள்ள எல்லா கருவிகளும் இணைய சந்தையில் தாராளமாக விற்பனைக்குள்ளன! இலவசங்களை வழங்கும் தமிழக அரசு இது போன்றவற்றை வழங்கலாம். பின்குறிப்பு: நீங்கள் விரும்பினால் இப்பதிவை உங்களின் வலைத்தளம், facebook, twitter-ல் பகிர்ந்து கொள்ளலாம். இது பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசை. விரும்பினால் என் வலைதளத்தின் இணைப்பை கொடுங்கள்.

THANKS:

http://www.tamilcatholican.com/2012/03/blog-post.html 

வியாழன், மார்ச் 01, 2012




You are here: கட்டுரைகள் சிறப்பு மாணவர் விரும்பும் ஆசிரியர்!

மாணவர் விரும்பும் ஆசிரியர்!


மாணவர் விரும்பும் ஆசிரியர்ஒரு மாணவனின் அறிவுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் மூன்று:

1. அனுபவம்
2. பெற்றோர்
3. ஆசிரியர்
ஆசிரியர்கள்மீது சில குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படும். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

சில ஆசிரியர்கள் எப்பொழுதும் கோபமாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே மாணவர்கள் பயப்படுவர். சிலபேர் எப்பொழுதும் எரிந்து விழுவார்கள்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக் கொள்பவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தைக் கற்க வேண்டும் என்கிற ஆசை வரும்.

மாணவர் விரும்பும் ஆசிரியர்ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குச் சில சான்றுகள்:

ஒரு மாணவன் தவறு செய்தானென்றால், அல்லது தொடர்ந்து ஒரு தவறைச் செய்வானானால் சில ஆசிரியர்கள் உடனே அவனைத் திட்டி விடுவார்கள். தண்டனைக் கொடுப்பார்கள். சிலர் பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்.

இதனால் மாணவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் மீது மிகுந்த வெறுப்பு ஏற்படும். இதற்கு உதாரணம், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடைப்பெற்ற ஜீரணிக்க முடியாத சம்பவம்..

சென்னையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் "உமா மகேஸ்வரி" என்ற ஆசிரியை பணி புரிந்தார். சரியாக படிக்காத இர்ஃபான் என்ற மாணவனைத் திருத்த நினைத்து அவனைத் திட்டி, அவன் பெற்றோரிடம் திட்டு வாங்கி, அதனால் அவனுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு தான் என்ன செய்கிறோம் என்றறியாமல் கத்தியால் அந்த ஆசிரியையைக் கொன்றுவிட்டான்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்அந்த மாணவனின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதன்று இங்கு நோக்கம். ஆசிரியர்கள் எது செய்தாலும் மாணவர்களின் நன்மைக்காகத்தான் செய்வார்கள். ஆனால் அதை எப்படிச் செய்வார்கள் என்பதிலேயே மாணவர்களிடம் மாற்றமும் மாறாமையும் இருக்கிறது என்பதுதான் இங்கு விசயம்.

ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், அவனைத் தனியாக அழைத்துப் பேசலாம். ஒரு மாணவன் படிக்காமல் இருப்பதற்குக் குடும்பம், நண்பர்கள், அவனுடைய எண்ணங்கள், குழப்பம் போன்று பல காரணங்கள் இருக்கலாம்.

அவன் படிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று அறிந்து அதனைச் சரி செய்து, அவனைச் சிறந்த மாணவனாக உருவாக்கிக் காட்டுவதிலேயே அவ்வாசிரியரின் திறமை இருக்கிறது.

மாணவர்களுக்குப் படிப்பின் அவசியத்தையும் நன்மையையும் அன்பான வார்த்தைகளால் புரிய வைக்க வேண்டும். ஒருவனுக்கு எதில் ஆசை, ஆர்வம், ஈடுபாடு இருக்கிறதோ அதில் அவன் சிறந்து விளங்குவான். இதனை மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்மாணவர்களைத் திருத்துவதற்கு அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமேதவிர, கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ஆசிரியர்களே!

மாணவர்கள், தம்மைக் கட்டாயப்படுத்திப் படிக்க வைப்பதை விரும்பமாட்டார்கள். சுதந்திரமாகப் படிப்பதைத்தான் விரும்புவார்கள். கோபத்தைவிட அன்பைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

சென்னையில் நடந்தது போன்றதொரு அசம்பாவிதம் இனிமேலும் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம். சென்னை சம்பவத்தையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களை அன்பால் அரவணைத்து அவர்களின் வாழ்வைச் சீராக்க முயற்சிப்பார்களாக.

- S.A.K.  அத்தால் அக்ரம் (7 ஆம் வகுப்பு)

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)




3000 symbols left



You are here: கட்டுரைகள் சிறப்பு மாணவர் விரும்பும் ஆசிரியர்!

மாணவர் விரும்பும் ஆசிரியர்!


மாணவர் விரும்பும் ஆசிரியர்ஒரு மாணவனின் அறிவுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் மூன்று:

1. அனுபவம்
2. பெற்றோர்
3. ஆசிரியர்
ஆசிரியர்கள்மீது சில குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படும். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

சில ஆசிரியர்கள் எப்பொழுதும் கோபமாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே மாணவர்கள் பயப்படுவர். சிலபேர் எப்பொழுதும் எரிந்து விழுவார்கள்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக் கொள்பவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தைக் கற்க வேண்டும் என்கிற ஆசை வரும்.

மாணவர் விரும்பும் ஆசிரியர்ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குச் சில சான்றுகள்:

ஒரு மாணவன் தவறு செய்தானென்றால், அல்லது தொடர்ந்து ஒரு தவறைச் செய்வானானால் சில ஆசிரியர்கள் உடனே அவனைத் திட்டி விடுவார்கள். தண்டனைக் கொடுப்பார்கள். சிலர் பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்.

இதனால் மாணவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் மீது மிகுந்த வெறுப்பு ஏற்படும். இதற்கு உதாரணம், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடைப்பெற்ற ஜீரணிக்க முடியாத சம்பவம்..

சென்னையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் "உமா மகேஸ்வரி" என்ற ஆசிரியை பணி புரிந்தார். சரியாக படிக்காத இர்ஃபான் என்ற மாணவனைத் திருத்த நினைத்து அவனைத் திட்டி, அவன் பெற்றோரிடம் திட்டு வாங்கி, அதனால் அவனுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு தான் என்ன செய்கிறோம் என்றறியாமல் கத்தியால் அந்த ஆசிரியையைக் கொன்றுவிட்டான்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்அந்த மாணவனின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதன்று இங்கு நோக்கம். ஆசிரியர்கள் எது செய்தாலும் மாணவர்களின் நன்மைக்காகத்தான் செய்வார்கள். ஆனால் அதை எப்படிச் செய்வார்கள் என்பதிலேயே மாணவர்களிடம் மாற்றமும் மாறாமையும் இருக்கிறது என்பதுதான் இங்கு விசயம்.

ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், அவனைத் தனியாக அழைத்துப் பேசலாம். ஒரு மாணவன் படிக்காமல் இருப்பதற்குக் குடும்பம், நண்பர்கள், அவனுடைய எண்ணங்கள், குழப்பம் போன்று பல காரணங்கள் இருக்கலாம்.

அவன் படிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று அறிந்து அதனைச் சரி செய்து, அவனைச் சிறந்த மாணவனாக உருவாக்கிக் காட்டுவதிலேயே அவ்வாசிரியரின் திறமை இருக்கிறது.

மாணவர்களுக்குப் படிப்பின் அவசியத்தையும் நன்மையையும் அன்பான வார்த்தைகளால் புரிய வைக்க வேண்டும். ஒருவனுக்கு எதில் ஆசை, ஆர்வம், ஈடுபாடு இருக்கிறதோ அதில் அவன் சிறந்து விளங்குவான். இதனை மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்மாணவர்களைத் திருத்துவதற்கு அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமேதவிர, கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ஆசிரியர்களே!

மாணவர்கள், தம்மைக் கட்டாயப்படுத்திப் படிக்க வைப்பதை விரும்பமாட்டார்கள். சுதந்திரமாகப் படிப்பதைத்தான் விரும்புவார்கள். கோபத்தைவிட அன்பைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

சென்னையில் நடந்தது போன்றதொரு அசம்பாவிதம் இனிமேலும் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம். சென்னை சம்பவத்தையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களை அன்பால் அரவணைத்து அவர்களின் வாழ்வைச் சீராக்க முயற்சிப்பார்களாக.

- S.A.K.  அத்தால் அக்ரம் (7 ஆம் வகுப்பு)

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)




3000 symbols left





மாணவர் விரும்பும் ஆசிரியர்ஒரு மாணவனின் அறிவுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் மூன்று:

1. அனுபவம்
2. பெற்றோர்
3. ஆசிரியர்
ஆசிரியர்கள்மீது சில குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படும். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

சில ஆசிரியர்கள் எப்பொழுதும் கோபமாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே மாணவர்கள் பயப்படுவர். சிலபேர் எப்பொழுதும் எரிந்து விழுவார்கள்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக் கொள்பவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தைக் கற்க வேண்டும் என்கிற ஆசை வரும்.

மாணவர் விரும்பும் ஆசிரியர்ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குச் சில சான்றுகள்:

ஒரு மாணவன் தவறு செய்தானென்றால், அல்லது தொடர்ந்து ஒரு தவறைச் செய்வானானால் சில ஆசிரியர்கள் உடனே அவனைத் திட்டி விடுவார்கள். தண்டனைக் கொடுப்பார்கள். சிலர் பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்.

இதனால் மாணவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் மீது மிகுந்த வெறுப்பு ஏற்படும். இதற்கு உதாரணம், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடைப்பெற்ற ஜீரணிக்க முடியாத சம்பவம்..

சென்னையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் "உமா மகேஸ்வரி" என்ற ஆசிரியை பணி புரிந்தார். சரியாக படிக்காத இர்ஃபான் என்ற மாணவனைத் திருத்த நினைத்து அவனைத் திட்டி, அவன் பெற்றோரிடம் திட்டு வாங்கி, அதனால் அவனுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு தான் என்ன செய்கிறோம் என்றறியாமல் கத்தியால் அந்த ஆசிரியையைக் கொன்றுவிட்டான்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்அந்த மாணவனின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதன்று இங்கு நோக்கம். ஆசிரியர்கள் எது செய்தாலும் மாணவர்களின் நன்மைக்காகத்தான் செய்வார்கள். ஆனால் அதை எப்படிச் செய்வார்கள் என்பதிலேயே மாணவர்களிடம் மாற்றமும் மாறாமையும் இருக்கிறது என்பதுதான் இங்கு விசயம்.

ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், அவனைத் தனியாக அழைத்துப் பேசலாம். ஒரு மாணவன் படிக்காமல் இருப்பதற்குக் குடும்பம், நண்பர்கள், அவனுடைய எண்ணங்கள், குழப்பம் போன்று பல காரணங்கள் இருக்கலாம்.

அவன் படிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று அறிந்து அதனைச் சரி செய்து, அவனைச் சிறந்த மாணவனாக உருவாக்கிக் காட்டுவதிலேயே அவ்வாசிரியரின் திறமை இருக்கிறது.

மாணவர்களுக்குப் படிப்பின் அவசியத்தையும் நன்மையையும் அன்பான வார்த்தைகளால் புரிய வைக்க வேண்டும். ஒருவனுக்கு எதில் ஆசை, ஆர்வம், ஈடுபாடு இருக்கிறதோ அதில் அவன் சிறந்து விளங்குவான். இதனை மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்மாணவர்களைத் திருத்துவதற்கு அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமேதவிர, கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ஆசிரியர்களே!

மாணவர்கள், தம்மைக் கட்டாயப்படுத்திப் படிக்க வைப்பதை விரும்பமாட்டார்கள். சுதந்திரமாகப் படிப்பதைத்தான் விரும்புவார்கள். கோபத்தைவிட அன்பைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

சென்னையில் நடந்தது போன்றதொரு அசம்பாவிதம் இனிமேலும் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம். சென்னை சம்பவத்தையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களை அன்பால் அரவணைத்து அவர்களின் வாழ்வைச் சீராக்க முயற்சிப்பார்களாக.

- S.A.K.  அத்தால் அக்ரம் (7 ஆம் வகுப்பு)
THANKS:
http://www.inneram.com/articles/special-articles/model-teachers-3419.html