வியாழன், ஜூலை 12, 2012

தலைமுடி உதிர்வதைத் தடுக்க...

வணக்கம் நண்பர்களே..!

முப்பது வயதைத் தாண்டியதும் முன் வழுக்கை(front Bald ) விழும் என்று சொல்வார்கள்.. காரணம் பல கூறப்பட்டாலும், வயது முதிர்வும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வயதில்தான் பொறுப்புகள் அதிகம் வந்து சேரும்.

அதிக மனச்சுமைகள் வந்து சேரும் வயது இந்த நடுத்தர வயது. அலுவலகப் பணி(Office work,), குடும்பச் சிக்கல்கள்(Family Issues) இப்படி அனைத்தும் ஒட்டுமொத்தமாக வந்து மனதை குழப்பமடையச் செய்யும் வயது..இது.  இதனால் ஏற்படும் சோர்வு(Debility), கவலை(Anxiety) போன்ற காரணங்களாலும் முடி உதிரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்..

உடல்கோளாறுகள் காரணமாகக்கூட தலைமுடி உதிரும். சரி.. இத்தகைய முடி உதிர்வைத் தடுக்க முடியாதா? என்றால் நிச்சயம் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் உங்களுடைய பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதற்கான சுமூக முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாத, மனதை பாதிக்கத்தக்க வகையில் இருக்கும் பிரச்னைகளை மனதிற்குள் செலுத்தாமல் அந்தப் பிரச்னைகளை வெளியே தூக்கி எறிய வேண்டும்.

இந்த இரண்டும் செய்தால் மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட முடி உதிர்வையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

முடி உதிர்வை தடுக்கும் இரண்டாவது(The second way to prevent loose hair) வழிதான், அதற்குரிய முறையான வைத்தியம்..

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்:(Methods to prevent hair shedding)

1. ஆயில் மசாஜ் (Oil Masage)

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கவும். விரல் தாங்கும் சூட்டில் எண்ணெயை தலையில் தடவி விரல்களால் மசாஜ் செய்து விடுங்கள்..

2. தலையில் எண்ணையைத் தேய்க்கும்போது மயிர்கால்களில் படும்படி தடவும். முடியானது மிகவும் மென்மையான தன்மையுடையதால் அதிகமாக போட்டு கசக்கித் தேய்க்ககூடாது. மிதமாகத் தேய்க்கவும். பிறகு டவல் ஒன்றை எடுத்து அதை வெந்நீரில் நனைத்துப் பிழிந்துகொள்ளுங்கள். ஈரமாக்கிய துண்டை தலையில் நன்றாக இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு தலைக்கு குளித்துப் பாருங்கள்.. உங்களுக்குப் புத்துணர்வு கிடைப்பதோடு தலைமுடிக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

3. இந்த முறையை நாள்விடாமல் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர முடி உதிர்வைக் கட்டுப்படுத்தாலம்.

முடி உதிர்வைத் தடுக்க தேங்காய்ப்பால்:(Coconut milk is used to prevent loose hair)


தேங்காய்ப்பாலின் மகத்துவத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நன்றாக முற்றிய தேங்காயை துருவி அதிலிரிருந்து பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீருடன் கலந்து இளஞ்சூடாக்கவும். சூடாக்கிய தேங்காய்பால் நீரை கைத்தாங்கும் வெப்பத்தில் இருக்கும்போது தலையில் தேய்க்கவும்..பதினைந்து நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர உங்கள் முடி உதிரும் பிரச்னை நாளடைவில் கட்டுக்குள் வரும். முடியும் உதிராது..

ஆலிவ் ஆயிலின் அற்புதம்:(The Perfect Olive Oil)

ஆலிவ் எண்ணையைத் தொடர்ந்து முறையாகப் பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு தலைமுடிப் பிரச்சனை விரைவில் தீரும்.


ஆலிவ் எண்ணையின் பயன்கள்: 


1. பொடுகை நீக்குகிறது. 2. நரைமுடி தோன்றாமல் காக்கிறது. 3. கூந்தலை வலுப்பெறச் செய்கிறது. 4. முடி உதிர்வை தடுக்கிறது.

இந்த ஆலிவ் எண்ணையுடன் பாதாம் எண்ணையும் கலந்து தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை ஒழியும்.

தேங்காய்ப்பால் மட்டுமா? பசும்பால் கூட...(Cow 's milk also prevents hair shedding)

பசும்பால் முடிஉதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. புதிதாக கறந்த பசும்பாலை காய்ச்சி தலையில் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் அதை ஊற விடவும். இப்போது உங்களுக்குப் பிடித்த நல்ல ஷாம்பூவை போட்டு குளித்துவிடுங்கள்.. உங்கள் தலைமுடி பளபளவென மின்னும்.. கூடவே முடி உதிர்தலும் தடுக்கப்பட்டுவிடும். தொடர்ந்து செய்துப் பாருங்கள்.. பலன் நிச்சயம்.

நோய்த்தீர்க்கும் பந்தயத்தில் வெல்லும் வெந்தயம்:(Turmeric prevents hair shedding)


வெந்தயம் தலைப்பில் உள்ளவாறே, முக்கிய வைத்தியங்களில் பயன்படுகிறது. தலைமுடி உதிரும் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மாபெரும் மருந்து. அந்தக் காலங்களில் வெந்தயத்தை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தார்கள். அப்போது பெண்களின் தலைமுறை "கருகரு"வென இருந்தது. இப்போது கருமைநிறம் கொண்ட கூந்தல் உடையவர்கள்கூட அதை சாயம்(hair dye) பூசி வெளுத்துவிடுகிறார்கள். இயற்கையான கூந்தலே பெண்களுக்கு என்றுமே அழகுதரும்.

வெந்தயத்தை 4 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து தலைத்துக் குளித்துவர முடிஉதிரும் பிரச்னை நாளடைவில் ஒழிந்துபோகும். கூந்தலுக்கு பளபளப்புத் தன்மைத்தரக்கூடிய இந்த வெந்தயம்.

முடிஉதிரும் பிரச்னை யார் யாருக்கெல்லாம் வரும்?


இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை.. இது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். சிலருக்கு பாரம்பரியமாக வரும்.. சிலருக்கு இது அவரவர்கள் பணிபுரியும் சூழலுக்கேற்ப அமையும்.. தூசி மிகுந்த, வெப்ப மிகுந்த சூழல்களில் பணிபுரிபவர்களுக்கு இத்தகைய பிரச்னைகள் அதிகம் இருக்கும். இவ்வாறானவர்கள் தங்களின உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

வேறு சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும், மருந்து மாத்திரைகளால் கூட, பக்கவிளைவாக முடிஉதிரும் பிரச்சனை இருக்கும். இவைற்றையெல்லாம் கவனமுடன் கையாளும்போது மிக விரைவாக முடிஉதிரும் பிரச்னையை சரி செய்யலாம்..


நன்றி நண்பர்களே...!
THANKS:
http://www.thangampalani.com/2012/07/to-prevent-hair-losing.html#more

வெள்ளி, ஜூலை 06, 2012

தோல்விக்கு என்ன காரணம்? (வெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக்கை மந்திரங்கள்...)

வணக்கம் நண்பர்களே..!

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்தவரை அனைத்துக் குழந்தைகளுமே பிடிவாத குணம் கொண்ட வர்களே..! குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வார்கள்? தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள்களை() வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் பிடிவாதம் செய்வார்கள். தனக்குப் பிடித்தமான திண்பண்டங்களை வாங்கித் தரவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள். தாங்கள் விரும்பும் இடங்களுக்கு(பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை, கடற்கரை...) அழைத்துச் செல்லவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள்.

ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை(School Holidays) நாள்கள் வரும்போது இவ்வாறான இடங்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.
குழந்தைகளின் இதே பிடிவாத குணத்தையும், விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட அவர்களுக்கு நாம் பழக்க வேண்டும். இப்படிப்பட்ட பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக(Bulge scholar), பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்(Thomas Alva Edison).

தாமஸ் ஆல்வா எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில்(Laboratory) அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு(Record) ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு(Wax) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.

எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில்(Based on the process) ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.

தாமஸ் ஆல்வா எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்( True facts of Thomas Alva Edison ).

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்( Eligibility for scientists ) பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?

ஒரே நேரத்தில் நான் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின்(Continued attempts) விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில்(Scientists) சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.

100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் தாமஸ் ஆல்வா எடிசன்.

எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலர்தான். ஒரு குறிப்பிட்ட பாடத்தை மட்டும் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள், அப் பாடத்தைத் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய(memory) வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும்(Writing) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பயற்சி செய்து பாடங்களைப் படித்தால் போதும். அறிவியல் பாடம் எனக்கு ஆகாது. கணக்குப் பாடமென்றாலே எனக்கு உடம்பெல்லாம் படபடக்கும் என்பதெல்லாம் வெறும் பிரமை. அவர்களை இத்தகைய மாயமான பிரமையான எண்ணங்களிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து மீண்டும் மீண்டும் அவற்றை எளிய முறையில் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களும் அனைத்துப் பாடங்களிலும் சிறந்து விளங்குவார்கள்.

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(what), எதற்கு(which), எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு(Electric light), கிராமபோன்(Phone), ஒலிபெருக்கி(Speaker), திரைப்படம்(Movie) போன்றவற்றையெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளார் என்றால், தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின்,பெற்றோர்களின் அன்பில், அரவணைப்பில் இருக்கிற குழந்தைகள், முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நமது குழந்தைகள் இது போல பல சாதனைகளை நிகழ்த்தா முடியாதா என்ன?

தேவை தன்னம்பிக்கை, விடாமுயற்சி.. கூடுதலாக எடிசனின் வார்த்தைகளில் சொல்வெதன்றால் பிடிவாதம் மற்றும் எடுக்கும் முடிவுகளில் உறுதி, ஒரு செயலைச் செய்யும்போது ஏற்படும் விளைவால் துவண்டு விடாமல், அதை எப்படி செய்தால் சரியான முறையில் செய்யலாம் என்பதை தீர்மானித்து அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்தல் ஒன்றே நாம் தேடும் தேடலுக்கு விடை கிடைக்கும். செய்யும் செயலுக்கு வெற்றி கிடைக்கும். இதுதான் தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றியின் ரகசியம்.( True facts of Thomas Alva Edison ).

ஆரோக்கியமான செயல்களில் பிடிவாதமும் வெற்றித்தரும் என்பதை அவர் செயல்களிலிருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம். இதையே ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.

தாமஸ் ஆல்வா எடிசனின் வாக்குக்கு ஏற்ப பிடிவாதமும், திரும்ப, திரும்ப அச்செயலை செய்து, செய்து விழுந்து.. எழுந்து.. மீண்டும் விழுந்து.. எழுந்து.. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கத்தான் வேண்டும். அப்போதுதான் நாம் நினைக்கும் செயல் வெற்றியடையும். அறிஞர் ஒருவர் சொன்னது போல எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல.. எத்தனை முறை எழுந்து நின்றாய் என்பதுதான் முக்கியம். நாமும் கற்றுக்கொள்வோம்.. நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வெற்றிமுறையை கற்பிப்போம்.
THANKS

தங்கம்பழனி 

http://www.thangampalani.com/2012/07/true-facts-of-thomas-alva-edison.html 

செவ்வாய், ஜூலை 03, 2012

+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா, உஷார்!



உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.

அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.

அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.

இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.